Sunday, January 24, 2010
இயந்திர தமிழ்
எண்ணி பார்போம் ஏன் இந்த நிலை என்று .நான் தமிழிலோ அல்லது தமிழ் வழி கல்வியோ பயிலாதவன் .இப்படி ஏன் நம் நாட்டில் ஆனது . விஞ்ஞான ரீதியாக தாய் வழி கல்வியில் பயின்றால் மாணவர்களின் சிந்தனை ஆற்றல் பெருகும் என்றோ கூறுகிறார்கள்.
நாமோ தாய் மொழியை ஒரு பாடமாக கூட படிக்கச் தேவையில்லை பட்டம் பெற முடிகிறது. அனால் சில ஐரோப்பிய நாடுகளில் kandipaka thaai மொழி பயில வேண்டும் .
தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் எங்கோ சென்று விட்டேன் . சரி இப்பொழுது manii என்ன என்று கேட்பதற்கு கூட நாம் டைம் என்ன என்றோ, டைம் ப்ளீஸ் Endro Thaan Ketkirom .
சரித்திரம்
தமிழன் ராணுவத்தில் சேர்வதில் பின்தங்கி விட்டான் என்று ஒரு செய்தி இன்று பார்த்தேன் .ஆனால் மென்பொருள் துறையில் பணி செய்வதை ஆதிகம் விரும்பிகிறான் என்றும் கூறியது அந்த செய்தி.
ஏன் இந்த மோகம் என்று கேட்க எனக்கு தகுதி இல்லை . ஏன் என்றால் நானும் கூட ராணுவத்தில் சேர்வதை பற்றி என்றும் யோசித்ததில்லை .
ஆனால் நம் மாணவர்களுக்கு ராணுவத்தை பற்றி என்ன சொல்லி கொடுக்கிறோம் என்று எண்ணுகையில் , நான் படித்ததில் நேதாஜியும் , இந்திய தேசிய படையும் தவிர வேறு ஒன்று நினைவில் இல்லை .
நாம் ஏன் மாணவர்களுக்கு முறையான தற்கால ராணுவத்தை பற்றி சொல்லிகொடுக்க தயங்குகிறோம். சோழர்களும் பாண்டியர்களும் வாழ்ந்த நாட்டில் பழைய பெருமைகளை பற்றி மட்டுமே பேசி கொண்டு புதியதை ஏற்க ஏன் மறுக்கிறோம்.
ஏதோ ஒரு ஆங்கில படத்தில் வரும் வசனம் - சரித்திரங்கள் படைக்கப்படவில்லை, (திருத்தியும்) எழுதபடிருக்கலாம் .எனவே சரித்திரத்தை படிப்பதை விட படைக்க நினைப்போம்.
எனது இந்த கட்டுரையில் ஏதும் தவறு இருந்தால் திருத்தி கொள்ள விரும்பிகிறேன் .விமர்சநகல் வரவேற்க படுகின்றன ...
செ ராம சந்திரன்
Saturday, January 23, 2010
நாம் எப்போதும் வெற்றி என்பதன் அளவுகோலை முதல் மாணவராக வருவதும் ,படித்த படிப்புக்கு ஏற்ற வேலையும் ,நம் பெற்றோரை வாழ்த்த வாழ்கை தரத்தை விட ஒரு படி மேல் வாழ்கை தரத்தை உயர்த்துவதும் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் .
ஆனால் சிறந்த மாணவருக்கும் , முதல் மாணவருக்கும் உள்ள வித்தியாசம் நமக்கு தெரியவில்லை.மனப்பாடம் செய்து முதல் மாணவராக ,யாராலும் முடியும் . ஆனால் தான் படித்ததை மற்ற வருக்கு உபயோகபடும் படி செய்தல் ஒரு சிறந்த மாணவரால் மட்டுமே முடியும்.
இந்த கருத்தை யாரானும் மறுக்க விரும்பினாலோ அல்லது மாற்று கருத்து சொல்ல விரும்பினாலோ வரவேற்க படுகிறார்கள் .
செ .ராமசந்திரன் .